3 ஆயிரம் கிலோமீட்டர் நின்றுகொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய சாதனை பெண்மணி
Jun 12 2018 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில், உலக சாதனைக்காக, பெண்மணி ஒருவர் 3 ஆயிரம் கிலோமீட்டர் நின்றுகொண்டே இருசக்கர வாகனம் ஓட்டியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
சைபி என்ற பெண்மணி, உலக சாதனை புரிவதற்காக, 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தை நின்றுகொண்டே இயக்குவது என முடிவு செய்தார் அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து புறப்பட்ட அப்பெண்மணி, ராமநாதபுரம் வந்தடைந்தார். அப்போது பாம்பன் பாலத்தில் நின்றுகொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டியது, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. பெண்மையை காப்போம் என்ற குறிக்கோளுக்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது உலக சாதனையாக திகழும் என்றும் சைபி தெரிவித்துள்ளார்.