துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் - சி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

May 24 2018 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்தவர்களை குண்டு கட்டாக போலிசார் கைது செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது காவல் துறையின் அத்துமீறலால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி பொதுமக்‍கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான காவல் துறையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், காவல் துறைக்கும் எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து,உருவ பொம்மையை எரித்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பேருந்து நிலையத்தில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலியானவர்களின் குடும்பங்களுக்‍கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாகவும், குடும்பத்தில் ஒருவருக்‍கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்கக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00