தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற தலைவர்கள் மீது வழக்கு - சட்டத்திற்கு விரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் புகார்
May 24 2018 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற ஸ்டாலின், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டத்திற்கு விரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்தவர்களை மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், முத்தரசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், முத்தரசன், கமல்ஹாசன், தெஹ்லான் பாகவி, டி.விஜயராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியது, சட்டவிரோதமாக கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.