ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வீடுவீடாக புகுந்து கைது செய்யும் போலீசார் - கைது நடவடிக்கைக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறும் மக்கள் - வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள்
May 24 2018 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை வீடுவீடாக புகுந்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் ஊரைவிட்டு காலி செய்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதை ஒடுக்கும் நடவடிக்கையில் எடப்பாடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதுடன், வீடுவீடாக புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், பீதியடைந்துள்ள மக்கள், ஊரை காலி செய்து வருகின்றனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.