13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்
May 24 2018 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தூத்துக்குடிக்கு துணை ராணுவப்படை வரைவழைக்கப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் போராட்டம், மக்கள் கிளர்ச்சி போராட்டமாக மாறி புரட்சி வெடிக்கும் என எச்சரித்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்படும் நிலைக்கு சென்றுவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.