தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம் - மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமனம்
May 24 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தை சரியான முறையில் கையாளாத காரணத்தினால், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனை இட மாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்து வரும் சந்தீப்நந்தூரி நியமனமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளிரம்பா, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.