தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு
May 24 2018 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.