முடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு
May 23 2018 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து, மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் சி.வி. சண்முகம், முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவாக பேசியதற்கு, தமிழகம் முழுவதும் மருத்துவர் சமுதாயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மதுரை பழங்காநத்தம் பகுதியில், மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சர் தனது செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால், கோவில்களில் முடிதிருத்தும் பணிகளை புறக்கக்கணிக்கப் போவதாக அச்சமுதாயத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.