அன்வர்ராஜா எம்.பி., வக்பு வாரிய தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அவரது மகன் நாசர் அலியால் பாதிக்கப்பட்ட பெண் ரொஃபினா குற்றச்சாட்டு
Apr 21 2018 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அவர், அன்வர் ராஜா எம்.பி.யின் மகன் நாசர் அலி, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வேதனை தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரம் காவல்துறையில் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ரொஃபினா வேதனையுடன் கூறினார். பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய மகனுக்கு ஆதரவாக செயல்படும் அன்வர்ராஜா எம்.பி., வக்பு வாரியத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனவும் ரொஃபினா காட்டமாக தெரிவித்தார்.