தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவம்
Apr 21 2018 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிற்சாலை, வாகனங்கள் உள்ளிட்டவற்றால் வெளிவரும் புகை காரணமாக, பூமி நாளுக்குநாள் வெப்பமடைந்து வருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, மழையின் அளவு குறைந்தும், வெப்பம் அதிகரித்தும் காணப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனிடையே, சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளார். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்திய அளவில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 90 சதவீத அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்றும் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.