நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கிழித்து அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
Apr 21 2018 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கிழித்து அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி பூங்கா சாலையின் இருபுறமும் கழகம் சார்பில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திரு.டிடிவி தினகரனின் மக்கள் செல்வாக்கை பொறுக்க முடியாமல் துரோக ஆட்சியாளர்கள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ஏறிந்து இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
iframe width="790" height="578" src="https://www.youtube.com/embed/Ii5AgcrwEQM?showinfo=0&rel=0&autohide=1" frameborder="0" allowfullscreen>