மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கினர் - மதுரையில் சந்தானம் குழுவினர் தொடர் விசாரணை - பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெறுகின்றனர்
Apr 21 2018 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். வாக்குமூலத்தில் பெறப்படும் தகவலின் அடிப்படையில் மேல் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
Roll visuals
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம், நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நிர்மலா தேவியை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவினரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்திவரும் நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியிடம் காவல் விசாரணையை தொடங்கியுள்ளனர். விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி நேரடியாக நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின்போது பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்விசாரணைகள் இருக்குமென கூறப்படுகிறது. இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி 3வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார். மதுரையிலுள்ள சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. நண்பகலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரு. சந்தானம் விசாரணையைத் தொடர்கிறார். மேலும் சி.பி.சி.ஐ.டி.யில் ஒரு குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.