ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிப்பு
Apr 21 2018 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 8-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் - மத்திய அரசின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் 8ம் தேதி, சென்னை கோட்டையை, முற்றுகையிடுவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.