சோழிங்கநல்லூர் பாலவாக்கம் வட்ட கழகச் செயலாளர் மீது பொய் வழக்கு : காவல்துறையினருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு
Apr 20 2018 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் உள்ள பாலவாக்கம் வட்ட கழகச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைத்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துவங்கிய நாள் முதல் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் எழுச்சி உரை மற்றும் திறமையான அரசியல் செயல்பாட்டைக் கண்டு பொறாமைப்படும் ஈபிஎஸ், ஒபிஎஸ் அணியினரின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி மேற்கு பகுதி 185 வட்டம் பாலவாக்கம் வட்ட கழக செயலாளர் S.L.A.சாதர் அலி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சிறப்பாக உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஈபிஎஸ்,ஒபி எஸ் அணியினர் சாதர் அலி மீது பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை அறிந்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் செம்மஞ்சேரி குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் காவல்துறையிடம் கேட்டபோது இந்த வழக்கு மேலிடத்து உத்தரவு என திருப்பி அனுப்பி விட்டனர்.