மயிலாடுதுறையில் கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் வரும் 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : மயிலாடுதுறை தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
Apr 20 2018 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி தினகரன் தலைமையில், வரும் 27ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், இதுகுறித்து, மயிலாடுதுறை தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கழக துணைப்பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டி.டி.வி தினகரன், காவிரிக்கரையோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார். அதன்படி, வரும் 27ம் தேதி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த மயிலாடுதுறை தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், மயிலாடுதுறையில் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்டக்கழக செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியக்கழக செயலாளர் திரு. ஆர்.ராஜாராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.