பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் நியமித்த ஒருநபர் விசாரணைக்குழு - காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருடன் நேரில் விசாரணை
Apr 19 2018 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்மலா தேவி விவகாரத்தில் சி.சி.டி.வி. ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்யவிருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம், அழகர்கோவில் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில், நிர்மலா தேவி தொடர்பான ஆடியோபதிவுகளை ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை, எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சி.சி.டி.வி. ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.