நீதிமன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சட்ட அமைச்சர் உளறல் பேச்சு - மாண்புமிகு அம்மா ஆட்சியை குறைகூறும் விதமாக பேசியதற்கு கழகத்தினர், பொதுமக்கள் கடும் கண்டனம்
Mar 23 2018 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சியின்போது, நீதிமன்ற வளர்ச்சி பணிகளுக்காக 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் நீதிமன்ற வளர்ச்சிக்காக, ஆயிரத்து 355 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருப்பது மறைந்த மாண்புமிகு அம்மாவின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் உள்ள நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், நீதிமன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தவறான தகவலை சுட்டிக்காட்டியது, அம்மாவின் உண்மைத் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.