தஞ்சையில் கழகம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டம் : திருச்சியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது என கழக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

Mar 23 2018 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில் நாளை மறுநாள் கழகம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் திருச்சி மாநகரில் இருந்து ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்பது என கழக ஆலோசனைக்‍ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்‍க வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தஞ்சையில் நாளை மறுநாள் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி மாநகர் மாவட்டக்‍கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍கூட்டம், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், உறையூர், ஏர்போர்ட், பாலக்‍கரை, மலைக்‍கோட்டை பகுதிக்‍கழக நிர்வாகிகள், துவாக்‍குடி, திருவெறும்பூர் ஒன்றியக்‍கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்‍கூட்டத்தில், கழகம் சார்பில் தஞ்சையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில், திருச்சி மாநகரில் இருந்து ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்பது என தீர்மானிக்‍கப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00