தூத்துக்குடியில் பெண் கிராம உதவியாளர் மீது கிராம நிர்வாக அலுவலர் தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம உதவியாளர் சங்கம் அறிவிப்பு
Mar 23 2018 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் பெண் கிராம உதவியாளரை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகாரன்மடம் பகுதியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் திருமதி. வசந்தா. இவரை, கிராம நிர்வாக அலுவலர் திரு. லூர்து சேவியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த திருமதி. வசந்தா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண் கிராம உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிராம உதவியாளர் சங்கத்தினர், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.