கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரனின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு

Mar 23 2018 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திரளான கழகத்தினர் பங்கேற்றனர்.

கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் ஆலோசனையின் படி, கூட்டுறவு சங்க தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவது என நகர கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு. கே.டி. பச்சைமால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்று கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம், மாநகர் மாவட்ட கழக பொருளாளர் திரு. பால்கண்ணன் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் "புதிய பார்வை" ஆசிரியர் திரு. ம. நடராசனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் மடப்பட்டில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. கே.ஜி.பி. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சையில் நடைபெறவுள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபு உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, "புதிய பார்வை" ஆசிரியர் திரு. ம. நடராசனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துறிஞ்சாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க, தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம் தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியக் கழகம் சார்பில் எரையூர் கிராமத்தில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

நாகை மாவட்டம் தேத்தாக்குடி மற்றும் புஷ்பவனம் பகுதிகளை சேர்ந்த இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அணி மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர், தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர். சந்திரமோகன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00