தூத்துக்குடியில் மாற்றுப்பாதையில் செல்ல முயன்ற ராமராஜ்ய ரதம் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்
Mar 22 2018 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வி.எச்.பி. நடத்தி வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை ராமேஸ்வரத்தை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டம் வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்கிறது. இதையொட்டி யாத்திரை செல்லும் வழியெங்கிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமஜென்ம பூமியில், ராமர்கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ராம ராஜ்ய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை, இன்று ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்தது. காவல்துறையினர் அறிவுறுத்திய கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல், தேவிபட்டினம் வழியாக ரத யாத்திரை செல்ல முயன்றது. இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் வாக்குவாதமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அனுமதித்த பாதையிலேயே ராமராஜ்ய ரதம் சென்றது. ராமேஸ்வரத்தை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கும் இந்த யாத்திரை, வேம்பார், சூரங்குடி வழியாக கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதையொட்டி ரதம் செல்லும் பாதையில் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.