அடுத்த 5 ஆண்டுகளில் 16 இடங்களில் அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் : இந்திய அணுசக்தித்துறை தலைவர் பேட்டி
Mar 21 2018 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த 5 ஆண்டுகளில், 16 இடங்களில் அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனத் இந்திய அணுசக்தித்துறை தலைவர் திரு. சேகர் பாசு தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த. திரு. சேகர் பாசு , கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 1 மற்றும் 2வது உலைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இரு உலைகளிலும் ஆயிரம் மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வரும் ஆண்டில் 3-வது அணு உலை தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு அணு உலை வீதம் 6 அணு உலைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த அவர், அதன் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 16 இடங்களில் அமைக்கப்படும் என திரு. சேகர்பாசு அப்போது குறிப்பிட்டார்.