நாகையில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியில் மாணவர்கள் : பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Mar 21 2018 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில், பள்ளி சுற்றுச் சுவர் கட்டுமானப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய வீடியோ காட்சிகள் வைரலாக பரவியதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை, வெளிப் பாளையம், ரயிலடித் தெருவில் அமைந்துள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளை பள்ளி மாணவர்களை வைத்து அப்புறப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்க, கட்டுமானப் பணியில் கட்டுமானத் தொழிலாளர்ளுக்கு உதவியாக பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்திய வீடியோ காட்சிகள், தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து அரசு பொது தேர்வு நேரத்தில் மாணவர்களை வற்புறுத்தி கட்டுமானப்பணியில் ஈடுபட வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.