கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி நாகர்கோவிலில் வரும் 24ம் தேதி மாண்புமிகு அம்மாவின் 70வது பிறந்தநாள் விழா - கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை
Feb 22 2018 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அம்மாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா பேரவை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் பங்கேற்று ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலோடு, கழக கொள்கைபரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா தனது பிறந்த நாளில் ஏழை-எளியோருக்கு உதவிட நமக்கு எப்போதும் அன்பு கட்டளையிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு அம்மா காட்டிய இந்த நற்பாதையில், நம்மை வழிநடத்தும் கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி, நாளை மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதனத்தில் மாலை 5.00 மணியளவில் அம்மா பேரவை சார்பில், மாண்புமிகு அம்மாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும், கழக கொள்கைபரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.