சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பி.எஸ்.ஸை முற்றுகையிட்ட விவசாயிகள் - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு
Feb 22 2018 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பி.எஸ்.ஸை விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., காரில் திரும்பியபோது அவரது வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் தலைமைச் செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான வாதங்களை முன் வைக்காததால் காவிரி நீர் குறைக்கப்பட்டுள்ளதாகவும், காப்பீட்டுத் தொகை வழங்க அரசு முன்வரவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.