விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறிய பள்ளி ஆசிரியர் கைது : உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியர் கைது
Feb 22 2018 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் கிராமத்தில் இயங்கிய வரும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிர்மல் என்பவர், அதேபள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் ஆசிரியர் நிர்மல் மாணவியை காதலிப்பதாக கூறியது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்த சக ஆசிரியர் லாரன்ஸையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த இரண்டு ஆசிரியர்களையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு ஆசிரியரே காதல் வலை விரித்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.