விருதுநகரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் கைது : லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

Feb 22 2018 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகரில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன்கோவில் தெருவில் வீடியோ கடை நடத்தி வருபவர் திரு. பிரகாஷ். இவர், புதிய திரைப்பட சி.டி.க்கள் விற்பனை செய்த காரணத்திற்காக, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீசார் அவரது கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், தனது கடையை மீண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பெண் ஆய்வாளர் கமலி மற்றும் தலைமை காவலர் திரு. முருகேசன் ஆகியோரை பிரகாஷ் அணுகியுள்ளார். அப்போது கடையை மீண்டும் திறந்து நடத்த ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிரகாஷ் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த அறிவுரையின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெறும்போது பெண் ஆய்வாளர் கமலி மற்றும் தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00