திருச்சியில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு : பல்வேறு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Feb 21 2018 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், கருப்புகொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, தங்கள் ஆட்சி அதிகாரம் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை கைப்பாவையாக் கொண்டு, ஆட்சி செய்ய முயற்சிப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல், டெல்லி, புதுச்சேரி மாநிலங்களில், ஆளுநர்கள் நேரடியாகவே ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டு, குழப்பத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், தமிழகத்திலும் ஆளுநர் பன்ரிவால் புரோகித்தின் செயல்பாடு அமைந்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களே எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், பாரதிய ஜனதா அரசுக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தினை ஆய்வு மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் மனுக்களைப் பெறவும் வருகை தந்த ஆளுநர் பன்ரிவால் புரோகித்திற்கு, பல்வேறு கட்சியினர் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஜெயில் கார்னர் பகுதியில், திரண்டிருந்த 300-க்கும் மேற்பட்டோர், தங்களது கைகளில் கருப்பு கொடியேந்தி, ஆளுநருக்கு எதிராக கண்டண முழக்கமிட்டனர்.