பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Feb 21 2018 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு நிர்ணயித்த குறைந்தபட்சஊதியம் வழங்கிடவும், சிலிண்டர் டெலிவரி செய்வோரின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிலிண்டர் விநியோகிப்பவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை எண்ணெய்நிறுவனங்களும், ஏஜென்சிதாரர்களும் முறையாக வழங்க வேண்டும், வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள பொது விடுமுறைநாளில் சிலிண்டர் டெலிவரிசெய்பவர்களுக்கும் விடுமுறை வழங்கவேண்டும், இஎஸ்ஐ, பிஃஎப் சலுகைகளை வழங்கிட எண்ணெய் நிறுவனங்கள் முன்வரவேண்டும், அதேநேரம் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும்வகையில் அவர்களுக்கு காப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தினர் திருச்சி சத்திரம் பேருந்துநிலையம், அண்ணா சிலை அருகில் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிலிண்டர் டெலிவரிமேன்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.