ஈரோடு தாளவாடி சாலையில் சிறுத்தை நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்
Jan 23 2018 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, சாலையில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள், அதனை செல்போனில் படம் பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த இருந்து, கேர்மாளத்திக்கு நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கெத்தேசால் பிரிவு என்ற இடத்தில், சாலையில் ஏதோ வனவிலங்கு சென்று கொண்டு இருந்தது. காரில் வந்தவர்கள் அதனை உற்று நோக்கி பார்த்தபோது அந்த விலங்கு சிறுத்தைப் புலி என்று தெரிய வந்தது. அப்போது காரில் சென்றவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார்.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்து சென்ற சிறுத்தை, அதன் பிறகு புதருக்குள் சென்று மறைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை புலி நடமாட்டதால், மலைகிராமத்தைச் சேர்ந்த வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
உணவு தேடி இரவு நேரத்தில் சிறுத்தை சாலையைக் கடந்து செல்வது வழக்கமானது தான் எனக் குறிப்பிட்ட வனத்துறையினர், மாலை 6 மணிக்கு மேல் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை எங்கும் நிறுத்த வேண்டாம் என்றனர்.