சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தன்னை மகத்தான வெற்றிபெறச் செய்த, பொதுமக்களுக்கு, கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மீண்டும் நன்றி தெரிவித்தார். ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலில் செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மக்களின் பேராதரவோடு அமோக வெற்றிபெற்றார். ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். திரு. டிடிவி தினகரனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 57 பேர் டெபாசிட் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கழக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், கடந்த 3-ம் தேதி அன்று, ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நேற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு, திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் பெருந்திரளாக கூடி நின்று மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தண்டையார் பேட்டை நேதாஜி நகர் அருட்கோட்டம் அருள்மிகு முருகன் திருக்கோயிலில், கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில், பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ள எடப்பாடி அரசு, தனது பிடிவாதத்தை கைவிட்டு, பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, கடலூர் கிழக்கு மாவட்டக் கழக அம்மா பேரவை இணைச் செயலாளார் திரு.கேப்டன் காமராஜ் தலைமையில் மாற்றுகட்சியினர் பலர் விலகி, திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைந்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை தெற்குமாடவீதியைச் சேர்ந்த கழக தொண்டர் வனிதா-சரவணன் வீட்டிற்கு சென்ற திரு.டிடிவி தினகரன், மணமக்களுக்கு ஆசி வழங்கினார்.
தண்டையார் பேட்டை நேதாஜிநகர் அருட்கோட்டம் அருள்மிகு முருகன் திருக்கோயிலில் திரு. டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து நேதாஜி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாமியப் பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் மலர்தூவியும் ஆரத்திஎடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாவல் குடியிருப்புப் பகுதிகளில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திரு. டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தெடர்ந்து, பட்டேல்நகர், சஞ்சய்காந்தி நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார்.
அன்னை சத்தியா நகரில் அமைந்துள்ள அருள்மிகு நவகோள் நாயகி திருக்கோயிலில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ராஜசேகர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் திரு. டிடிவி தினகரன் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.