திருச்சியில் 9 வயது சிறுமிக்கு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் : சிறுமி பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

Jan 22 2018 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 9 வயது சிறுமிக்‍கு நடக்‍கவிருந்த குழந்தை திருமணத்தை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அச்சிறுமி பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முசிறியை அடுத்த மின்னத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா. இவரது மகள் சஞ்சனாவிற்கும், அவளது தாய்மாமன் மணி என்பவருக்‍கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்‍கு தகவல் கிடைத்ததன் பேரில், மகளிர் காவலர்கள் இத்திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த சிறுமியை அங்கிருந்து மீட்டு திருச்சியிலுள்ள பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் பாதுகாப்பு மைய அலுவலகத்திற்கு சென்று, சிறுமி சஞ்சனாவிற்‍கு திருமண ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும், தொடர்ந்து படிக்‍க வைப்பதாகவும் உறுதி அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் அச்சிறுமியை அவரது உறவினர்களுடன் அனுப்ப மறுத்துவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00