பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் : திருச்சியில் கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
Jan 22 2018 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேருந்து கட்டணத்தை உயர்த்திய துரோகிகளின் அரசுக்கு, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், மணிகண்டம் ஒன்றியத்தில் கழக அமைப்புச்செயலாளரும், வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.மனோகரன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்களை வாட்டி வதைக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்திய எடப்பாடி அரசுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி, கட்சி மற்றும் சின்னத்தை மீட்க, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.