மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
Jan 23 2018 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ கட்டணம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவால் மாநில பாடத்திட்டப்படி பயிலும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு.வைகோ, மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு, சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட அடிப்படையில் நடத்தும் மத்திய அரசின் முடிவு மிகவும் தவறானது என்பதால், அதனை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.