தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - ஏராளமானோர் பங்கேற்பு
Jan 22 2018 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் மற்றும் நடைப்பயணத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக எரிபொருள் சேமிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில், வாரத்தில் ஒரு நாள், கார் மற்றும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்க்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான நகரங்களை உருவாக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதனிடையே, இந்திய கடலோரக் காவல்படையின் 41-வது ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.