ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், 10-வது நாளாக நேற்று அத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நேற்று 10-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
குமரன் நகரில் பிரச்சாரத்தை தொடங்கிய வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரனுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்த அவருக்கு மலர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து, டிவைர் காலனியில் கழக துணைப்பொதுச் செயலாரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நின்றிருந்த பெண்களும், பொதுமக்களும் கைகளை அசைத்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, ஜெ.ஜெ.நகரில் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கக்கோரி பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
அப்போது, துரோகிகளின் அவலங்களையும், துரோக அரசின் அவலநிலைகளையும் எடுத்துரைத்து பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வழிநெடுகிலும், திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிள் பிரஷர் குக்கர் சின்னத்திற்கே தங்களது வாக்கு என உறுதிபடத் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நாகாத்தம்மன் கோவில் தெருவில் வழிநெடுகிலும், மற்றும் அடுக்குமாடி வீடுகளிலும் நின்ற பொதுமக்களும், தொண்டர்களும் கழக துணைப் பொதுச்செயலாளரும் வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கக்கோரி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளரும் வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், திரண்டிருந்த பொதுமக்களிடம், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் துரோகிகளின் அராஜக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இபிஎஸ்-ன் கைப்பாவையாக தேர்தல் ஆணையம், காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். துரோக ஆட்சியை முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டதாகவும், வாக்காளர் பணம் வாங்கினாலும் குக்கர் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன் திருநாவுக்கரசு தோட்டம் பகுதிக்கு வருகை தந்த போது, வழியெங்கும், திரளான பொதுமக்களும், தொண்டர்களும் மலர்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அந்த பகுதியில் இருந்த வாக்காளர்கள் தங்கள் வாக்கு பிரஷர் குக்கர் சின்னத்திற்கே என உறுதிபடத் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, பெருமாள் கோவில் தெருவில் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர், ஆரணி ரங்கன் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், விலை கொடுத்து வாக்காளர்களை வளைக்க பார்ப்பது ஒரு போதும் பலிக்காது என உறுதிபடத்தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மேயர் பாசுதேவ் தெரு, கே.பி.கார்டன், உள்ளிட்ட பகுதிகளில் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது அப்பகுதி பொதுமக்களும், தொண்டர்களும் மலர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பிரஷர் குக்கருக்கே தங்களின் வாக்குகள் என்றும் உறுதியளித்தனர்.
தொடர்ந்து மேயர் சிவசண்முகம் தெரு, கோதண்ட ராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் திரு.பத்மநாபன் மீது இபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.