கழகத்தை அழிப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கையே வருமான வரி சோதனை என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - மாண்புமிகு அம்மாவுக்கு மெய்க்காப்பாளனாக இருந்திருப்பதாகவும் உருக்கம்
Nov 21 2017 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகத்தை அழிப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கையே வருமான வரி சோதனை என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு அம்மாவுக்கு மெய்க்காப்பாளனாக இருந்திருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு.டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்போவதாகக் கூறி, அம்மா இல்லத்தில் சோதனை நடத்தியது சரிதானா? என்றும் கேள்வி எழுப்பினார்.