நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணியிலிருந்து 50 பேர் விலகி கழகத்தில் இணைந்தனர்
Nov 19 2017 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணியிலிருந்து 50 பேர் விலகி, கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பழனிச்சாமி அணியினரின் நிர்வாக சீர்கேடு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் கண்டனம் வலுத்து வருகிறது. இதனால் அந்த அணியைச் சேர்ந்த ஏராளமானோர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தைச் சேர்ந்த தோப்புத்துறை, ராமகிருஷ்ணாபுரம் மற்றும் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணியிலிருந்து மகளிர் உட்பட 50 பேர் விலகி, நாகை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. ஆர்.சந்திரமோகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.