திருச்சியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி : பழங்கால பொருட்களை கண்டு மகிழ்ந்த மாணவர்கள்
Nov 19 2017 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்களின் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டு மகிழும் வகையில், திருச்சி தனியார் பள்ளி ஒன்றில் பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பொருட்களின் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றும், நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியில் 100 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வீட்டு உபயோகப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக பாக்குவெட்டி, வாள், தராசு, நாணயங்கள், உலோக கருவிகள், இசைக்கருவிகள், விளக்குகள், பண்டமாற்று முறை பொருட்கள், அணிகலன்கள் மட்டுமன்றி கற்கால மனிதர்களின் வரலாறு உள்ளிட்ட பலவகையான அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போதைய தலைமுறையினர் தங்களது வீடுகளில் இதுவரை பார்த்திராத முன்னோர்கள் பயன்படுத்திய இத்தகைய அரிய பொருட்களை பிரமிப்புடன் பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ந்தனர்.