மறைந்த அம்மா மூலம் அடையாளம் காணப்பட்டு 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் டிடிவி தினகரன் : கழக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேட்டி
Nov 20 2017 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மறைந்த மாண்புமிகு அம்மா மூலம் அடையாளம் காணப்பட்டு, 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் என கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எடப்பாடி தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமாக பதிலளித்தார். கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக்கியதோடு, அவருக்கு கழக பொருளாளர் பதவியையும் அம்மா வழங்கினார் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.