வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 81-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, நெல்லையில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில், கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில் இன்று, கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 81-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, நெல்லையில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்தில், கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் சார்பில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, இந்த விழாவுக்கு வருகை தந்த கழக துணை பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, திருநெல்வேலி அரியகுளம், KTC நகர், பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக மகளிரணி செயலாளர் விஜிலாசத்தியானந்த் எம்.பி., கழக அமைப்பு செயலாளர்கள் திரு.ஆர்.பி.ஆதித்தன், திரு.கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.பாப்புலர் வி.முத்தையா, நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.S.S.N.சொக்கலிங்கம் உள்ளிட்டோர், கழக துணை பொது செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, தூத்துக்குடி புனித மரியன்னை திருத்தலம் அருகே கழக தொண்டர்கள், மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை என்ற இடத்தில், ஏராளமான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான வாகனங்களின் அணிவகுப்புடன், கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 81-வது குருபூஜை விழாவில், கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்
பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.