மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-சுமே காரணம் - கழக நிர்வாகிகள் கடும் கண்டனம்
Nov 18 2017 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடிக்கணக்கான கழக தொண்டர்களும், தமிழக மக்களும் கோயிலாக வழிபடும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதையறிந்த கழகத் தொண்டர்கள் கொந்தளிப்படைந்தனர். இந்த சோதனைக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-சுமே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அரசு தூண்டுதலின்பேரில் துரோகம் இழைத்து வரும் எடப்பாடிக்கு கழகத்தினரும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.