போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனையை தடுக்க தவறிய பழனிசாமியைக் கண்டித்து சென்னையில் இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்
Nov 18 2017 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மா வாழ்ந்த கோவிலான போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனையை தடுக்க தவறிய பழனிசாமியைக் கண்டித்து சென்னையில் இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோடான கோடி தொண்டர்களின் கோவிலாக விளங்கும் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த காரணமாக பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ரவிச்சந்திரன் என்ற இளைஞர் ஏறி நின்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். மாண்புமிகு அம்மா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த காரணமான பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அவர் முழக்கங்களை எழுப்பினார். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞர் செல்போன் டவரிலிருந்து இறங்கினார்.