சென்னையில் நடைபெற்று வரும் ஓவியக்‍ கண்காட்சி - ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

Oct 21 2017 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் ஓவியக்‍ கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் 2 நாள் ஓவியக்‍ கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த திருமதி லாவண்யா பாலாஜி நடத்திவரும் ஓவியப்பள்ளியில் பயின்றவர்கள் வரைந்த பல்வேறு வகையான ஓவியங்கள் இக்‍கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறும் இந்தக்‍ கண்காட்சியில், தங்க பட்டைகளைப் பயன்படுத்தி கலைநுணுக்‍க வேலைப்பாடுகள் நிரம்பிய பாரம்பரியமிக்‍க தஞ்சாவூர் ஓவியங்கள் பார்வையாளர்களை தன்வசப்படுத்துகின்றன.

பலவண்ண ஓவியங்களைக்‍ கொண்டு எண்ண ஓட்டத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதால் மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சி பூரிப்பதாக ஓவியம் பயின்றுவரும் பெண்மணி கூறுகிறார்.

கேரளாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ள மாணவர் ஒருவர் தனித்துவத்துடன் திகழ்வதற்காகவே ஓவியம் கற்றுவருவதாக தெரிவித்தார்.

ஐம்பூதங்களையும் ஒரு ஓவியத்தின்மூலம் வெளிப்படுத்தியுள்ள பாங்கு, ஆயில் பெயிண்ட்டிங் மூலம் காசியை கண்முன்னே கொண்டுவரும் ஓவியம் என அழகழகான ஓவியங்களின் சரமாக விளங்குகிறது இந்தக்‍ கண்காட்சி.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00