கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழியில் பணியாற்றி வரும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு - பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கல்
Oct 22 2017 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 110-வது பிறந்தநாள் மற்றும் 55-வது நினைவுதினத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் திரு. ஜி. சிற்றரசு நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று, அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் திரு. ஜி. சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். வரும் 30-ம் தேதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி மற்றும் 55-வது குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெறவுள்ள விழாவில் கலந்துகொள்ள கோரி அவரிடம் அழைப்பிதழை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத்தலைவர் திரு.ஜி. சிற்றரசு, கழகப் பொதுச் செயலாளர்தியாகத்தலைவி சின்னம்மாவுக்கும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கும் என்றும் துணையாக நிற்போம் என தெரிவித்தார்.