அ.இ.அ.தி.மு.க அம்மா பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் மேலான ஆணையின்படியும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவிப்பின்படியும், கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க ஆண்டு விழாவை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் திரு. அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்க தமிழ்செல்வன், கழக பொருளாளர் திரு. ரெங்கசாமி, தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். கதிர்காமு உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக உத்தமபாளையத்திற்கு வருகை தந்த கழக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான, திரு. தங்கத் தமிழ்செல்வனுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திரு. தங்க தமிழ்செல்வன், கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொறடா உத்திரவை மீறி செயல்பட்டவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி, கொறடா உத்தரவை மீறாமல் இருந்த தங்களை தகுதி நீக்கம் செய்வதா? என கேள்வி எழுப்பினார்.
கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், கழக இலக்கிய அணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கழகம் சார்பில் கழகத்தின் 46-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர். சந்திரமோகன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இதனிடையே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், கழகத்தின் 46-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகிற 25-ம் தேதி திண்டுக்கல் மணிகூண்டு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.