பொறையாறு பணிமனை கட்டட விபத்து - படுகாயமடைந்த மூன்று பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் அனுமதி
Oct 21 2017 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் பொறையாறு போக்குவரத்து பணிமனையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து மூன்று பேர் உயர்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் நேற்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், திரு. வெங்கடேஷ், திரு. பிரேம்குமார், திரு. செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும், உயர்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.