தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் : தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் பீதி
Oct 21 2017 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த உடையார்குளம் கிராமத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் 6 வயது மகள் சந்தியா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.