மணப்பாறை அருகே சாலையில் வீணாகச்சென்ற குடிநீரை பயன்படுத்திய பொதுமக்‍கள் - குழாயை அடைக்‍க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

Oct 21 2017 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

மணப்பாறை அருகே சாலையில் வீணாகச்சென்ற குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தநிலையில், அந்தக்குழாயை அடைக்க அதிகாரிகள் வந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட தீராம்பட்டி பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. நகராட்சி சார்பிலும் சரியான குடிநீர் வழங்கப்படாததால் பலமுறை போராட்டம் நடத்தியும் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த காவிரி குழாயின் வால்வில் இருந்து தண்ணீர் வெளியானது. வீணாக வெளிவந்த நீரை அப்பகுதி மக்கள் பிடித்து பயன்படுத்தி வந்தநிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த குழாயை அடைக்கச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குடிநீர் விநியோகமும் செய்ய முன்வராத அரசு, தற்போது மக்கள் பயன்படுத்திவரும் வீணாகச் செல்லும் குடிநீரை அடைக்க வருவதா என்றும், பல்வேறு இடங்களில் காவிரி குடிநீர் வீணாக வெளியேறும் நிலையில் நாங்கள் முறையாக பிடித்து பயன்படுத்திவரும் சூழ்நிலையில் அதை அடைக்க கூடாது என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00