மதுரை வைகை அணையை தூய்மைப்படுத்த 5 நீண்ட காலத்திட்டங்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்
Oct 20 2017 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை வைகை அணையை தூய்மைப்படுத்த 5 நீண்ட காலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வைகையை அணையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் திரு. வீர ராகவராவ், மதுரையில் உள்ள வைகை அணையை தூய்மைப்படுத்த 5 நீண்ட காலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும், கரையோரத்தில் 43 கிலோ மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் என்றும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் டெங்கு தடுப்ப பணிகளை அதிகாரிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.